பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

________________

92 கலந்து பேசமாட்டார் - குறிப்பறிந்து நடந்து கொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்தா லொழியப் பதவிகளுக்கு வரலாகாது என்பார்- ஆமாம்! என்றுரைக் வேண்டும்-- அடுத்த முறை ஐந்தாண்டு வேண் டாம், மூன்று ஆண்டுகளே போதும் என்பார்-ஆமாம்! ஐந்தாண்டு அதிகம் - மூன்று ஆண்டுகளே போதும் என் றுரைக்க வேண்டும். கழகக் காரியத்தில் இன்னார் இருப்பது ஆபத்து என் பார் - விலக்கி வைத்திருக்கிறோம் என்று கூற வேண்டும்- அட்டாடா; ரொம்ப நல்லவர்! நிரம்புத் திறமைசாலி! அவர் எந்த அக்னிப் பரீட்சைக்கும் தயாராக இருப்பவர்- என்பார். ஆமாம்! என்று சொல்ல வேண்டும். நமது கழகத்தைத் துச்சமென்று எண்ணும் கலைஞனை நாம் மதிக்கலாந்து என்பார்-ஆமாம்! மதிக்கத்தான் கூடாது என்றுரைக்க வேண்டும்; கழகத் தொடர்பு இருக் தாலென்ன?இல்லாது போனால் என்ன? கலைஞனை அவ னுடைய திறமைக்காகப் பாராட் வேண்டும் என்பார்- பாராட்டுவோம் என்றுரைக்க வேண்டும். தம்பி! இப்படி ஒரு பயங்கர நிலைமை வளர்ந்து, நான் எல்லாவற்றுக்கும் இசைவு தந்தேன் என் இராந்த விருப்பு வெறுப்புப் பற்றிய கவலையைக்கூட விட்டொழித்து. ஆனால், திராவிடநாடு வேண்டாம். பிரிவினையே வேண் டாம். இந்தியப் பேரரசிலேயே ஒட்டிக் கொண்டிருக்கலாம். சமதர்மம் கூட வேண்டாம், என்பதற்குமா, :நான் சம்ம திக்க முடியும்! கொள்கையைக் கடைப்பிடித்தபடி கோபதாபம் காட் டினாலும், முறைகளை மாற்றினாலும், வசவுகளை வீசினாலும். பொறுத்துக் கொண்டேன். ஆனால், கொள்கையையே மாற்றி விடும்போது, நான் எப்படி இணங்க முடியும்-