பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

________________

94 வந்த நேருவின் இராஜ தந்திரத்திற்கு முற்றிலும் முரணான வகையிலும் அவருடைய பேச்சுக்கள் உருவெடுத்திருக் கின்றன. "ஆந்திர மாநிலம் வேண்டும்- என்ற கிளர்ச்சி நடை பெற்ற போது, பண்டித நேரு எவ்வளவு ஆணவமாகப் பேசினார்! முடியாது, முடியாது, முடியாது: யார் அவன்- ஆந்திர மாநிலம் கேட்பவன்? இந்த மக்கள் சபையில்கூட யாரேனும் இருக்கிறார்களா என்று முறைத்துப் பார்த்து, அதட்டி உட்கார வைத்துக் கொண்டிருந்தார்; அங்கிலையில், பொட்டி சீராமுலு உண்ணா விரதம் தொடங்கி விட்டார்; அவருடைய நிலை கவலைக்கிடமா யிருக்கிறது, என்று செய்தி வருகிறது; என்றாலும், மக்கள் சபையில் பிரதமர் நேரு வீர கர்ஜனை புரிந்தார்- ஆயிரம் பொட்டி சீராமுலு கள் பிணமானாலும்--நாள் என்னுடைய நிலையிலிருந்து பிறழமாட்டேன்; தனி மாகாணம் வேண்டும். என்ற கருத் துக் காட்டுமிராண்டித் தனமானது'- என்று பிட்டார். குறிப் "ஆனால் பழைய பண்டித நேரு-1945-ல் இருந்த நேரு என்ன சொன்னார்? கம்யூனிஸ்ட் கட்சியைவிட வேகமாக வாதாடினார் -- தனித்தனி மாகாணங்கள் வேண்டு மென்று மட்டுமல்ல; தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்படுபவை. தனி அரசாக வாழ வேண்டும் மென்று விரும்பினாலும் வாழ லாம், அதைக் காங்கிரஸ் தடுக்காது-நானிருக்கிற வரையில் கடுக்கவிடமாட்டேன்'- என்று! அந்தப் பேச்சு எங்கே நிகழ்ந்தது என்பதை அறியும்போது இன்னமும் நமக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும். "காஷ்மீர் கலைநகர் ஸ்ரீக்கரில் நிகழ்ந்தது, அந்தப் பேச்சு; அங்கே இருக்கிறது - நமது அனுதாபத்திற்குரிய அரசியல் ஏமாளியான ஷேக் அப்துல்லா இருக்கிறாரே, அவர், கூட்டம் ஒன்றில், நேருவுக்கு ஒரு விண்ணப்பத்தைப் படித்