பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

________________

95 துக் காட்டினார்; என்ன அந்த விண்ணப்பம்? 'தனித்தனி அந்த அந்த தேசீய இனங்கள். தனித்தனி அரசை நிறுவிக் கொள்வதற்குக் காங்கிரஸ் ஆக்கமளிக்க வேண்டும்,-என் ற, தான் அவர் விண்ணப்பித்துக் கொண்டார். "அதைக் கேட்ட நேரு. சீறி எழுந்தார்; அளிக்க வேண் டும் என்ற கோருவதிலே இருந்து, நாங்கள் ஏதோ அதைப் பிரிப்பதைப் போலல்லவா கேட்கிறீர்கள்? நாங்கள் அதற் காகவே இருக்கிறவர்கள்; தனி அரசு மட்டுமல்ல- அந்தத் தனியரசிலே வாழுகிற ஒரு 'குரூப்' கோஷ்டி, அது தனியரசு வேண்டு மென்று விரும்பினாலும் அதில் நூற்றுக்கு நூறு நியாயம் இருக்கிறது;'-என்று பண்டித நேரு பேசினார். 'அந்தப் பேச்சின் கான்கைந்து வாசகங்களை உங்களுக்கு நான் கூறுகிறேன்;ஏனென்றால் அவர்கள் ஏதோ பெரிய தத்துவங்களை வகுத்துக் கொண்டவர்களைப் போலவும், நாம் எதோ 'தத்து பித்து' என்று உணர்ச்சி வேகத்தில் கேட்கக்கூடாதவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கும் 'தப்பிலி" களைப்போலவும் பல நண்பர்கள் எண்ணி, நம்மை ஏசிப் பேசுகிறார்கள். அவர்களுக்கு விளக்கம் தருவதற்காக, 1945-ம் ஆண்டில் வாழ்ந்த கேரு. பேசியதை இங்கே எடுத்துரைக் கிறேன். நேரு பேசுகிறார், கேளுங்கள்:-- இந்தியாவிலிருந்து ஏவராவது பிரிந்து செல்ல விரும்பி னால், 'வேண்டாம்' என்று காங்கிரஸ் அவர்களை வேண்டிக் கொள்ளும்; வேண்டிக்கொண்டதற்குப் பின்னும், பிரிந்து தான் செல்லுவோம்' என்று சொன்னால் கண்ணியத்தோடு அதை அனுமதித்துவிடும். "இது பண்டித நேரு பேசியது-1945 ஆகஸ்டு 2- தேதி ஸ்ரீநகரில் பேசினார். 'காங்கிரஸ் ஏற்கனவே தனித் தனி தேசீய இனங் களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுவிட் டது'- கோபத்தோடு இப்படிப் பேசினாராம் நேரு! ஏன்?