பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

________________

97 டியருக்கே வேண்டு மென்ற கோரிக்கைக்கு உமது பதில் என்ன? "முடியாது; டில்லியின் நேரடி ஆட்சியில்தான் இருக் கும்.' என்பதுதானே! "யாரையா அதை முடிவு செய்வது? பம்பாயிலே இருக் கிற மக்களா? டில்லியில் இருக்கிற நீரா?;- என்று மராட்டி யர் கேட்கிறார்கள்! நான்தான்! நானேதான்!" என்று பதில் சொல்கிறார் நேரு "நோவே! 1945-ம் வருடத்திய நேருவே! நீ உயிர் பெற்று வாமாட்டாயா?-என்று நாங்கள் கோருகிறோம். மக்கள் உரிமையை மதிக்காமல், மதோன்மத்தரைப் போல், பழைய காலத்துக் காட்டுமிராண்டி. இராசாக்களைப் போல் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற இந்த 1956-ம் ஆண்டு நேருவுக்குப் புத்தி புகட்ட, நீ உயிர்பெற்று வாராயா?- என்று.நான் கேட்கிறோம்! "தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் தமிழர்கள் வாழு கிறார்கள்; அவை தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டும், என்று நாம் கோருகிறோம். "தமிழர்கள் வாழுவதனாலேயே அப்பகுதிகள், தமிழகத் துடன் சேராது; அங்கிருக்கிற தமிழர்கள் விரும்புவதனா லேயே அது தமிழகத்துடன் சேராது; நாள் விரும்பினால் மட்டுமே அது எங்காவது சேரலாம் அல்லது செத்து ஒழியா லாம், என்று ஒருவர் பேசுகிறார்.

  • 1945-ம் வருடத்திய நேருவே! நீ இறங்கி வந்து, அவ ருக்குப் பாடம் புகட்டாயா?- என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது!

இதே பாணியில் தம்பி சம்பத்தே! தோழர் சம்பத் அவர்களைத் திருத்தமாட்டாயா, என்று கேட்கத் தோன்று