பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை தெரசாவை அந்த அர்த்தத்தில் அழைக்க மாட்டோம் நாம்.... எங்கோ பிறந்து இங்கு வந்து ஏழை எளியவர்க் கிரங்கி உதவினார் தொழுநோயாளர்களைத் தொட்டுச் சேவை செய்தார்.... தொண்டு செய்து தொண்டு செய்து பழுத்தார் அன்னை தெரசாவை அகிலம் தழைக்க வந்த தொண்டு கிழம் என்று கண்டு கொண்டேம் நாம். Ω கடையெழு வள்ளல் காலம் முடிந்ததே என்ற கவலை இனிமேல் வேண்டாம்.... இப்போதும் இங்கே கடையெழு வள்ளலைக் காணலாம்.... காட்டலாம்... தீபாவளிக்கு முன்னால் தெருக்களில் எல்லாம் துறைதோறும் துறைதோறும் தங்களுக்குத் தொண்டு செய்ய இனாம் கேட்டு வருகிற இரவலர் கூட்டத்தைக் 172 0 மீரா