பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை நீராய்..... மகா நதியாய்..... வெண்பஞ்சினும் மெல்லிய ஒரு மயிலிறகின் தடவலாய் ஒரு செந்தாமரை மலரின் தழுவலாய் உடலும் உள்ளமும் ஒரு விநோத மலர்ச்சியில் ஒன்றியிருக்கும் உன்னத வேளையில் உயிர் உருக விடைபெறும் வேளையில் உன் திருமுகம் நோக்குகிறேன்.... கபடமற்ற ஒரு குழந்தையின் குதுகலச் சிரிப்பும் பற்றற்ற ஒரு ஞானியின் புன்னகையும் அதில் ஒளிவீசக் காண்கிறேன். ஒரு நல்ல ஒவியனின் தூரிகையில் விரும்பியவாறு வண்ணமும் கோடும் வளைவும் வந்து சேர்வதுபோல் கோடையும் வசந்தமும் 0 193