பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ இல்லாவிட்டால்..... தினம் தினம் ஒரு சின்னத் தடையுமில்லாமல் ஒரு தடங்கலுமில்லாமல் உன் சித்திர மேனியின் நித்தில வனப்பை வைத்தகண் வாங்காமல் பார்க்க வேண்டும்; என்னுள் கோடிக் கற்பக மலர்கள் பூக்க வேண்டும். உன் ஒவ்வோர் அசைவிலும் ஒய்யார நடையிலும் ஒடிய முயலும் இடையிலும் பரிகாசம் செய்து பளிச்செனச் சிந்தும் பரிசுத்த அழகிலும் ஊனும் உயிரும் உருக உருகத் தேனும் பாலும் வெள்ளமாய்ப் பெருகத் தீர்த்தமாடும் ஒரு பக்தனைப் போல கோடையும் வசந்தமும் 0 197