பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அடியுங்கள் சாவுமணி

அறியாமைக்கும் அடிமைத்தனத்துக்கும் அநாசாரத்துக்கும், அட்டைச் செயல் பெற்ற சுரண்டும் கும்பலுக்கும் சாவுமணி அடியுங்கள்.
அறிவு வளர்ச்சியை அடக்கி ஒடுக்கும் குள்ள நரிச்செயலுக்குச் சாவுமணி அடியுங்கள்.
தாம் வாழ பிறர் அறியாமையை அஸ்திவாரமாக்கி, பொருளாதார நிலையைச் சீர்குலைக்கும் புளியேப்பக்காரர்களாய் வாழும் புரோகிதத்துக்கு சாவு மணி அடியுங்கள்.
அபினென மக்களைப் போதையில் ஆழ்த்தி மனித குலத்தை மண்ணோடு மண்ணுக்கும் அந்த காரக் கருவூலமான மதத்துக்கு சாவுமணி அடியுங்கள்.
கடவுள், விதி, கர்மம் என்று முணமுணத்து, சோம்பேறிகளாய், போட்டுத் தேரைகளாய் புன்மைப் பூச்சிகளாய், முதுகெலும்பற்ற 'பதார்த்தங்களாய் வாழும்படி மனிதர்களைச் செயலற்றுப் போகும்படி செய்த மடத்தனம் எதுவோ அதற்குச் சாவுமணி அடியுங்கள்.
மனிதன் தேவனாக வேண்டாம். மனிதன் மனிதனும்  வாழவேண்டும். அதற்கு வகை செய்யாமல், அசடர்களாய் மாற்றுகின்ற ஆரியத்துக்கு, புரோகிதப் புல்லுருவித்தனத்துக்குச் சாவுமணி அடியுங்கள்
       அடியுங்கள் சாவுமணி:
   புதியதோர் உலகம் காணப் புறப்பட்டோம். தயங்க மாட்டோம். விழித்தெழுந்தோம். வீறு