பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/103

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிதைகள்

19.எவன் தமிழன்?

ஏட்டிலுள்ள தமிழரினால்

எக்களித்த தென்னுள்ளம்;

நாட்டிலுள்ள தமிழரினால்

நாணமதே தோன்றிற்று;

கேட்டிடுவீர் தமிழகத்தீர்,

கேடுற்ற நம்நிலையே!

நாட்டிடுவீர் இனியேனும்

'நாமும்சீர்த் தமிழ'ரென்றே.

84

மின்மினியும் விண்மீனும்

மினுக்குவதில் ஒன்றேயாம்!

நன்முல்லை தும்பையிவை

நறுமணத்தில் ஒன்றாமோ?

என்மொழியுஞ் செந்தமிழ்தான்

என்றேதாம் கூறிடினும்,

தன்மானம் இல்லையெனில்

தமிழரெனத் தகுவாரோ?</poem>

85

59