இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கவிதைகள்
19.எவன் தமிழன்?
ஏட்டிலுள்ள தமிழரினால்
- எக்களித்த தென்னுள்ளம்;
நாட்டிலுள்ள தமிழரினால்
- நாணமதே தோன்றிற்று;
கேட்டிடுவீர் தமிழகத்தீர்,
- கேடுற்ற நம்நிலையே!
நாட்டிடுவீர் இனியேனும்
- 'நாமும்சீர்த் தமிழ'ரென்றே.
84
மின்மினியும் விண்மீனும்
- மினுக்குவதில் ஒன்றேயாம்!
நன்முல்லை தும்பையிவை
- நறுமணத்தில் ஒன்றாமோ?
என்மொழியுஞ் செந்தமிழ்தான்
- என்றேதாம் கூறிடினும்,
தன்மானம் இல்லையெனில்
- தமிழரெனத் தகுவாரோ?</poem>
85
59