இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
பேரலைகள் சிற்றலையைத் துரத்தி வந்து
பெயர்ந்தேதான் சிற்றலையாய்த் தேய்ந்து மாளும்; வீரரென்போர் ஓய்பவரை வீணே ஓட்டி
வீணாகார்; விழைந்தவர்க்கே உதவி நிற்பார்; சீரமைப்பே வாழ்வதணில் சிறக்க வேண்டின்
சினமின்றி, வன்சொல்லும் சிறிதும் இன்றிப் பாரதனில் பண்புடனே பழகல் வேண்டும்;
பஞ்சைகளைப் பரிந்து நின்று பேண வேண்டும்.
- |25
உற்றவர்க்கே ஓடோடி உதவ வேண்டும்;
உதவிபெற்றே நன்றிமறந் தெதிர்ப்ப ராயின் மற்றவரை மனத்தகற்றி மறக்க வேண்டும்;
மற்றொருகால் உதவியெனில் மதுகை முப்பால் சொற்றகுறள் நன்றாற்றல் உள்ளும் தீய
தவறுண்டாம் அவரவர்தம் பண்பறிந்தே பற்றென்ற* பொருள்நினைவிற் பற்ற வேண்டும்; பழிநேரா தவைகொள்ளப் பரிய வேண்டும்.
| 26
78