இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
28. "நல்ல குத்தகை.
மன்னவர் குடிதனில் சின்னையர் பண்ணையார் பன்னிரு வேலிநிலம் பட்டா உடையவர்;
தன்னலம் அவரது தனிக்குணம்; படுத்தே
தன்நில விளைச்சலைத் தான்காண விரும்பினார்.
காத்தான் என்றொரு பண்ணையாள், தன்நிலம்
காத்தான் என்பது கணக்கொடு கண்டவர்;
காத்தான் சேரிக்குக் காலையி லேபோய்க்
'காத்தா' என்றனர்; காத்தனும் வந்தனன்.
'தன்னலம் நோக்காது என்னலம் நோக்கியே,
பன்னெடு நாள்களாய்ப் பண்ணை நீ செய்கிறாய்;
அன்னதால் குத்தகைக் கென்நிலம் யாவையும்
உன்னிடம் விடுகிறேன், மாவிற்குப் பத்தாய்.
நல்லமண் ஆகையால் நன்னான்கு விளைவதும் எல்லையே என்பதும் நல்லை நீ அறிந்ததே;
செல்லும் விரைதசு செலவுகள் உன்னதே;
சில்லரைக் கடன்களும் தருகிறேன்' என்றார்.
9 |
150
I5]
|52
153