இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
மச்சான் பிச்சையும், மருமகன் முருகனும் கச்சூரி லிருந்து கடுகிவந் தடைந்தனர்; சச்சர விலாமலே சளைக்காமல் கவலையாய்
மிச்சங் கண்டிடவே மாடோ டுழைத்தனர்.
'அழுதிட்ட வாழ்க்கையில் அலைந்தோம் பலநாள் பழுதினைப் போக்கியே பெருகுவோம் இனி எனத் தொழுதனர் கடவுளைக் கொளுவினை மாட்டியே
உழுதனர் நிலத்தினை ஊடுருவி ஆழமாய்.
விதைத்தனர்; பறித்தனர். விரைவாய் நட்டனர்; சதைத்தாள் கதிர்கள் சாய்ந்திடும் வேளையில் சிதைத்தது காற்றும், சேர்ந்தது சூரையும்;
பதைத்தனர் விளைந்தது பத்துதான் என்றதும்.
செத்திடா உடலினான் சென்றான் ஐயரிடம்; சொத்தையும் சூரையும் சொக்கிய தென்றான் பத்துக்குக் குறையாமல் பதரெலாம் தூற்றியே,
மொத்தமாய் வரவேண்டும் முழுமையாய் என்றார்.
92
| 54
| 55
156
| 57