இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
நகைக்கும்பல், தனித்தமிழ்வாய்,
நறுமூக்கு, நயக்குங்கண், நற்சொல் நாக்கு, முகைக்குங்கை, முந்துங்கால்,
உழைக்குமுடல் இவையென்றும் உயர்த்தல்
கண்டேம் : புகைக்கும்வாய், தம்பலப்பல்,
பொடிமூக்கு, திரைப்படக்கண், கள்சேர் நாக்கு, தகைக்குங்கை, தடுக்குங்கால்,
தடித்தவுடல் இவைநெறிகொள் தகவாய்க் காணேம்.
197
பெரும்பாடாம் நன்னோக்கம்
பிறங்கிடவே அலுப்பின்றிப் பிழைகள் இன்றி
அரும்பாடு படுவதனால்
அடுநோயும் கவலையதும் அறுதல் கண்டேம்; இரும்பாடும் காட்டாற்றின்
இடையுருண்டு மெருகேறும் கூழாங் கல்லில் வெறுப்பாசி பிடித்ததென
வேடிக்கைப் பேச்சினிலும் விளம்பக் கானேம், | 98
| 15