இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
உடலதனில் அரிப்பெடுத்தால்
உடன் கையால் தமைச்சொறிந்தே உவப்பைக்
கொள்வார்; "படப'டென்றே மனமரித்தால்
பதறிப்போய் மற்றவரைப் பழிச்சொல் சொல்வார்; உடலரிப்போ தீர்ந்துவிடும்,
உளத்தரிப்பாம் தீராநோய்க் குழல்வார் கண்டேம்; மடல் அவிழ்கள் தேன்மதுவாம்,
மற்றொருகள் குடலறுக்காத் தேனாய்க் ಹಣ್ಣು
2
ஆள்பிடித்துக் கால்பிடித்தே
அண்டங்காக் கைபிடித்தே அடம்பி டித்து,
வால்பிடித்து வளம்பிடிக்க -
வலைபிடிப்பார் பல்லோராய் வளர்தல் கண்டேம்;
சூல்பிடிக்கப் பெண்நாயைச் -
சூழ்ந்துநின்று வால்குழைத்துச் சுற்றிச் சுற்றிச் சால்பிடிக்கும் வெறிநாய்கள்
சந்தியிலும் இழிவன்றிச் சால்பாய்க் காணேம்.
2/4
| 23