பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தந்தை பெரியார் நா - ஊட்டிய

தன்மானக் கருத்தால்

நந்தம் அறிஞர்அண்ணா - நாட்டிய

தமிழ்நா டெனும்பெயரால்,

பாரதி தாசனெனும் - புரட்சிப்

. பாவேந்தர் தேன்பாவால், சீரதி கம்பெற்றே - பகையைச்

சீறியே வெல்வதுகாண்!

இயற்புல வர்குழந்தை - இயற்றிய

இராவண காவியமும் நயப்புடை நாமக்கல்லார் - நல்கிய

நற்கவியும் அணிகாண்!

விண்ணில் ஒளிர்மீன்கள் . கணக்கில்

விரிக்க ஒண்னுமோகாண்;

எண்ணில் தமிழ்நூல்கள் எண்ணில்

எண்ணும் கிடைக்குமோகாண்!

173

342

343

344

345