இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
வாடிக்கை யாகவே அவர்க்குள்ளே
வாங்கல் கொடுக்கல் தீர்த்தபின்னர், வேடிக்கை யாய்ச்சில பேசிவந்தார்;
வெற்றுப் புரிசைகள் ஓய்ந்தபின்னர் ஆடிக்கை கோத்தவப் பொறையனுமே
ஆம்,எங்கே பொங்கலுக் காவனதாம் தேடிக்கை கூடின தேட்டமெல்லாம்
தேன்குடிலே! யான்காண வேண்டும்'என்றான்.
- 353 பொருத்த மாயுள பொருளெல்லாம்
பொலிவாய் வாங்கி நான் பேழையுளே திருத்தி வைத்துளேன் பாரும் என்றாள்:
திறந்து காட்டினாள் பேழையினை, உறுத்துப் பார்த்தனன் ஒன்றுமிலை;
ஒரிரு நூல்களும் மைக்கூடும் பருத்த மையூற்றுக் கோலிரண்டும்
பக்கத்தில் தாட்பொதி யுங்கண்டனன்.
354
- தாட்பொதி - தாள்கட்டு
|8 |