இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
புண்ணின்றி நடுங்கவைக்கும்
பொல்லாத வாடையதைத் தண்ணென்னும் நறுந்தமிழால்
தகவாக்கி வனைந்தனைகாண்; ஒண்ணாத ஒன்றெடுத்தே
ஒள்ளியதாய் நலம்பாடி
மண்ணள்ளிப் பொன்னளிக்கும்
மதர்ப்பதனை என்னென்பேன்!
மிகத்தளர்த்தும் பிரிவென்னும்
அகப்பொருளும் வைத்துப்போர் முகத்தமைக்கும் பாசறையாம்
புறப்பொருளும் இணைத்தனைகாண்; பகைத்துப்போம் பாசறையில் --
பாண்டியன்றன் திறம்பாடி
அகத்துக்கே புறங்காட்டி
அடைந்தவெற்றி என்னென்பேன்!
- இவை மூன்றும் தாழிசைகள்
195