இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
மனைவிட்டுப் புறப்படுங்கால் மக்கள்
மனையாள்பால் மனந்தொட்டுப் பேசி எனைவிட்டுப் பிரிந்திருப்பீர்; யானோ
எடுத்துவிட்ட செயல்தொடுத்து முடித்துச் சுனைவிட்ட நீரெனவே வருவேன்;
சுளைவிட்ட தேன்சுவைகாள்' என்றே நினைவெடுத்துச் சொல்லிவிட்டுச் சென்றால்
நிகழ்ந்திடுமோ "எங்'கென்னுஞ் சொல்லே?
476
பணம்விரிக்கப் புறப்படுவேன்; நாளை
பழையனூர் சென்றிடுவேன்; முல்லை
மணம்விரிக்கும் நேரத்தில் வருவேன்;
மனம்விரித்துக் காத்திருப்பீர்' என்றே
குணம்விரித்துச் சென்றிடுதல் நல்ல
குடும்பத்துத் திருவாளர்க் கழகாம்
சினம்விரித்துச் சீறிவிழுள் தேகல்
சிரிக்கின்ற தெருவாழ்வுக் கழகாம். 7
. 477
265