இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
ஞாயிற் றதனை நகைதிங் களதை
யாம் போற் றுது'மென் றொருகாப் பியத்தின் வாயிற் றிறந்த வளமார் புதுமை
அவனே யன்றி எவனே செய்தான்? -
553
பொழில்சேர் வளமார் புகார்க்காண் டமதில்
பொன்னார் உளத்தன் பொழியும் பெருமை எழில்சேர் கவிதை ஏற்றத் தனிலே
எளிமை தவழும்; இனிமை அவிழும்.
. 564
முத்துடை வளமார் மதுரைக் காண்டம்
முழுதும் இழைந்து முழங்கும் பொருளில் அத்துணைச் சுவையும் அருங்கண் ணகிதன்
ஆண்மைச் சுவையாம்; அவலக் குவையாம்.
565
வனப்பார் மலைசேர் வஞ்சிக் காண்டம்
வழங்கும் புகழ்ம்ை வகைசேர் பொருளில் சினப்போர்த் தமிழன் சிறப்பிற் புறமார்
சீற்றம் மிளிரும்; ஏற்றம் ஒளிரும்.
566
296