பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/364

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிதைகள்

இல்லத்து விழவெல்லாம் இனத்தமிழர் தமைக்கொண்டே
வெல்லத்துத் தமிழ்சொல்லிச் செய்வித்தல் தமிழர்கடன்;
கள்ளத்தைக் கடுஞ்சொல்லைக் கனவினிலும் கருதாது
சொல்லொத்துச் செயல்புரிந்த செல்வத்தார் திரு. வி. க.

608


பெண்ணுலகைப் போற்றுவதும், ஆணுலகால்
வளர்பகையம்
புண்ணுலகில் பரவாமல் புத்துலகாய் மாற்றுவதும்,
கண்ணொளிமங் கியபோதும் கண்ணியம்மங் காதபெரும்
தண்ணொளியார் திரு. வி. க; தமிழ்ஒளியார் திரு. வி. க.

609




323