பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தோழி:

தாங்குதற்குத் தோழி நிற்க, இதுதான் தேவை 'தா'என்றால் தரநானே துடித்து நிற்கத் தீங்குதந்து போயினளே என்றே ஆவி திகைக்கின்ற தந்தைநிலை தீர்க்கப் போமோ? தலைவி:

தேங்குழலைக் கேட்கின்ற பருவ மன்று; தேவைகொண்ட இன்பமதோ அத்தா னன்றித், தாங்குதந்தைக் கேலாத தன்மை சாற்றித் தாழ்திகைப்பை நகைப்பாக்கத் திரும்பிப் போடி!

தோழி: . t

உனைப்பிரிந்து துணையறியா எனைப்பி ரிந்தே உளம்வாடச் செய்தனையே நானென் செய்வேன்? தலைவி: . . . . .”

64

எனைப்போல நீயுமொரு துணையை நாடி எழில்குவிக்கும் இன்பத்தை எய்தப் போடி!

தோழி: - .

நனையாமல் நரியதனை நீராட் டல்போல் நயமான மாற்றமெலாம் நவின்றாய். நன்றே: புனைநீயே வாழ்க்கைதனக் கென்றுன் மாமன் புரிந்துவரும் செயலதனைப் புகன்றால் சோர்வாய். 65

44