சிந்தனைகள் - தொகுதி : ஒன்று
37
சீவக சிந்தாமணிசெய். 3121
ஆசையார்வ மோடையமின்றியே யோசைபோ யுலகுண்ண நோற்றி னேசுபெண்ணொழித் திந்திரர்களாய் தூயஞானமாய்த் துறக்கமெய்தினார்.
மக்களுள் ஆதியாய் இந்திரியங்களை வென்றவரும், ஐந்தவித்த வல்லபத்தால் ஆதி இந்திரரென்னும் பெயர் பெற்று, அவர் ஞானவருள் பெற்ற தேவர்களால் வானவர் கோமானாகக் கொண்டாடப் பெற்றவரும் புத்தபிரானேயாம்.
திரிக்குறள் செய்.25 ஐந்தவித்தானாற்ற லகல்விசும்பு ளார்க்கோமான் இந்திரனே சாலுங் கரி.
அருங்கலச் செப்பு இந்தியத்தை வென்றான் தொடர் பாட்டோடாரம்ப முந்தி துறந்தான் முநி .
மணிமேகலை இந்திரரெனப்படு மிறைவகம் மிறைவன் றந்தநூற் பிடகந் தாயமுன்முதலா .
சீவகசிந்தாமணிசெய்.3094 ஏத்தரிய பல்குணங்கட் கெல்லை வரம்பாகி நீத்தவரு ளிந்திரனை நின்று தொழுதமரர் நாத்தழும்ப வேத்திதவ நங்கையவர் நண்ணித் தோத்திரங்களோதி துகண்மாசு துணிகின்றார்.
சூளாமணி சுருக்கம் - 11 செய்.80 மந்திரமாந்தர் மொழிதலும் வானிடை யந்தரம்வாழு மமரர் வழிபடுந் தந்திரஞான்ற தவத்திற் கரசனா மிந்திர னன்னாற் கெடுத்துரைக்கின்றான்.
மனுக்களுள் காம, வெகுளி, மயக்கங்களாம் முக்குற்றங் களையுமகற்றி, அன்பை பெருக்கி, உண்மை நிலையாகும் நிருவாணத்தை யடைகின்றார்களோ, அவர்களையே சிவனென்
38