பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி இரண்டு I 49 5. 10. 15. 30. அவ்வை யென்னு மைந்நெறிகிளத்தி செவ்விய தன்மம் செப்புவங் கேண்மின் தென்பரதத்து துறையுந் நாட்டின் மன்னவன் சாக்கை சுந்திரவாகு நற்றவத் துதித்த நானில முதல்வி பேதைப் பெதும்பை பாலையுங் கடந்து மாதர்ப் பருவ மங்கைமெய் யடைந்து அம்மையர் தன்ம சங்க மமரு மிம்மெயி னோக்க மிகுதியினின்று தாதையை யணுகி தற்பரன் வியார சாதன மமருந் துறையருள்வீரென வோதிய மொழியை யுள்ளத் தமைத்து தாதையு மந்திர சாதனர்க் கோதி மங்கைப் பருவம் வாய்ந்த மகட்கு தன் தாய் மாமன் பொன்சர டிட்டு சமண நீத்தோர் தன்னுரைக் கொண்டு துறவற வியல். திரிபிடக விசாரணையினின்று காவிய2ணந்து சீலசா சனங்கொண்டு உண்மெயுணர்ந்த வானந்தத்தால் பெண்கள் வியாரத் தெதிரிலுள்ள பூக மரமென வழங்கும் வேம்பு மரத் தடியில் வந்து உட்கார்ந்து பெரியோர்கள் முதல் சிறுவர்கள் வரையில் எளிதி லுணருமாறு திரிபிடக தரும போதங்கள் எளிய வாசக நடையில் திரிவாசகங்களாக போதித்து வந்தாள். பிடகத்தை யறிவித்தவளாதலின் பிடகறி பிடகறியென்று முதற்பே ரளித்தார்கள். அறவுரை யென்று மடுத்துணர் திரிவி பிரவியம் பாசப் பந்தங் கழற்றி பிடகமும்மொழிப் பிரித்துல கோர்க்குத் திடமுறு திரிவா சகமதாய் விரித்து உமன நாட்டு ளுமை வியாரத்தில் சமண நீத்தோர் தண்ணந்தம்மருள். பிடகறி பிடாறி யென்னுங் காரணப் பெயர்பெற்ற வேம்படியம்பாள் தான் மோனநிலையாலடைந்த ஞானவிழி பார்வையால் செல்லல் நிகழல் வருங்கால் மூன்றின் பலன்களை யும் குடிகளுக்கு விவரித்துவந்த காலத்தில் நாகைநாடென்னும்