பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 2 க. அயோத்திதாஸப் பண்டிதர் 3. இல்லறமல்லது நல்லறமன்று. இல்லறம் - மனையாளுடன் கூடிவாழும் வாழ்க்கையில் மனமொத்து வாழ்தலே, நல்லறமெனப்படும் அல்லது - அவ்வகையல்லாதது, நல்லறமன்று - நல்லறமென்பதற்று பொல்லறமென்று கூறுதற் கேதுவுண்டாம். இல்வாழ்க்கையில் மனையாளனும் மனையாட்டியும் மனமொத்து வாழ்தலே இல்லறமென்னும் நல்லறமாவதுடன் இகவாழ்க்கையிலும் சுகவாழ்க்கை பெறுவார்களென்பது கருத்து. மனமொத்து வாழும் இல்லாளின் வாழ்க்கைப் பெற்ற வன் துறந்த பெரியோர்களுக்கும், துறவா சிரியோர் களுக்கும், மறந்திரந்த மக்களுக்கும் உதவிபுரியும் உத்தமதைலின் இல்லறத்தில் நல்லறத்தோனே மிக்க மதித்துக் கூறியுள்ளாள். திரிக்குறள் இல்வாழ் வானென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்ற துணை. அறநெறிச்சாரம் மடப்பது உமக்கட் பெறுவது உம் பெண்பான் முடிப்பது உமெல்லாருஞ் செய்வர் படைத்ததனல் இட்டுண்டில் வாழ்க்கை புரிந்துதா னல்லறத்தே நிற்பரேல் பெண்டி ரென்பார். நாயனதிகாரர் காப்பியம். தலைவனந் தலைவியென்பார் தங்களிற் பக்கமன்பு நிலைமன மொருமெயோடு நீணிலந்தன்னில் வாழ்தல் பலனவ னென்னில் வானிற் பரமனு மருள்பேரின்ப நலனுநீடுழிகாலம் நன்கொடு வாழ்குவாரே. 4. ஈயார் தேட்டை தீயார்கொள்வர். ஈயார் - மற்றவர்க்குக் கொடாத லோபியரின், தேட்டை - சுகப்பொருளை, தீயார் - வஞ்சகர், கள்ளர் பொய்யர்களாகியக் கொரூரச் சிந்தையை யுடையவர்கள், கொள்வர் - அபகரித்துக் கொள்ளுவார்கள் என்பதாம்.