பக்கம்:சகுந்தலா.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சகுந்தலா செத்தேன். அம்மா, அப்பா, என்று வேதனையில்ை ஒலயிடும் அப&லயின் அழுகுரல் அவன் காதுகளில் விழும். பக்கத்து விட்டில் என்ன, கொலே கிலே நடக்கிறதா?” என்று பதறி எழுவான் ரகுராமன். இருட்டோடு இருட் டாக. வி.ஸ் நடுங்கத் தனது படுக்கையில் உட்கர்ர்ந்திருப் பான். அவளுல் என்னத்தைச் சாதித்துவிடமுடியும்? வேண்டு மானுல் இந்தப்பக்கத்திலிருந்து அவனும் கூவே கூ' என்று கூச்சவிடலாம், தெருவிலுள்ளவர்கள் அவனுக்குப் பைத் தியம் பிடித்துவிட்டது என்றுதான் நினைப்பார்கள். அதனுல் அவன் அத்தகைய அசட்டுத்தனக் காரியம் எதையும் செய்து வைக்கவில்லே. சகுராமனுக்கு ரொம்பக் கஷ்டமாகத்தானிருந்தது. அடுத்தவிட்டில் அமைதி யில்லாமல் போய் தனக்குக் கிடைத் துள்ள சுகவாசம் சிதைந்துவிடும் என்று முன்பு அஞ்சினன். ஆனுல் இப்பொழுதோ அங்கு பகலில் நிலவிய ஆழ்ந்த அமைதிதான் அவனுக்கு வேதனே தந்தது, நாலுவீடுகளைப் போல ஆரவாரமும் கலகலப்புமாக இருந்தால் கவலேயே பில்லேயே! இதில் ஏதோ மர்மம் இருப்பது போலல்லவா தோன்றுகிறது ' என்று கினைத்தான் அவன். அடுத்தவிட்டு மர்மத்தை ஆராய்ந்து தெளிவுபடுத்திக் கொள்ள் என்ன செய்யல்ாம் என்பதே பெரிய விசாரமாகி விட்டது ரகுராமனுக்கு. சந்தர்ப்பம் அவனே வெகுகாலம் ஏங்கிக் கிடக்கும்படி விட்டுவிட வில்லே. — 2 — டுத்த விட்டுக்கு யார் வந்தால் என்ன , எவர் ஒல் நமக்கென்ன ! நாம் நமது உரிமைகளே ஸ்தாபிக்க வேண்டியதுதான். இத்தனே நாள் வரை விட்டு வைத் திருந்ததே தப்பிதம்தான்' என்று நினைத்தான் ரகுராமன். பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடித்தனம் வந்ததும் ரகுராமன் தானுகவே தனது பழக்கங்களே மாற்றிக் கொண் டான், முன்பெல்லாம் அவன் பின்புறத்துத் தோட்டத்தில் மரத்தின் குளிர் நிழலில் அதிக நேரம் தங்கியிருப்பது வழக்கம். மற்றவர்களுக்கு அதல்ை தொல்லே ஏற்படக் கூடாதே என்ற எண்ணத்துடன் அவனுகவே அதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/14&oldid=814729" இலிருந்து மீள்விக்கப்பட்டது