14 క్ల சகுந்தலா 'உண்மையிலேயே இவருக்கு அந்தத் திறமையிருந்தால் இம்ம பாடு ஆபத்து தான்' என்றது அவன் மனம். அப்படி ஒரு சக்தியிருந்தால் இதற்குள்ளே இவரு என் உண்மைத் தன்மையை அறிந்திருப்பாரே சகுந்தலேயைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார். சும்மா வெத்து வேட்டு ' என்றும் சிசித்தது. . மற்றவர்கள் எ ன் ன சொல்லுவார்கள் - சொல்லத் துணியா விட்டாலும் என்ன நினைப்பார்கள்-என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் இஷ்டம் போல் உளறிக் கொட்டுகிற கிழவர்களேப் போலத் தான் ஞானசம்பந்தரும் பேசினு:ர். தனது அசட்டுத்தன உளறல்களுக்கு மனசில் பட்ட உண்மையை உள்ளது உள்ளபடி சொல்லி விடுவது” என்று விளக்கம் வேறு செய்தார் இவர். - அங்கிருந்த பிரமுகரைப் பற்றி தாராளமாகவே அபிப் பிராயம் அறிவித்தார் ஞானசம்பந்தர். இவர் ஆடம்பர மாக வாழ வேணும், வாழ்க்கை யென் ருல் அகப்படுகிற இன் பங்களே எல்லாம் அனுபவித்துப் பார்த்து விட வேண்டியது. தான் என்ற எண்ணம் உடையவர். அதனலே பூலோக பிருக்தாவன லீலைகளிலே ஈடுபாடு அதிகம் இருக்க வேண்டும் என்னப்யா கர்ன் சொல்றது? ஏதாவது தவறு இருந்தால் சொல்விப் போடும் என்று அவுட்டுச் சிரிப்பு ஒன்று சிரித் து வை:ததாா. பிரமுகர் முகத்தைக் கவனித்தான் ரகு. அவருக்கு, உணர்ச்சிக் குழப்பம் ஏற்பட்டது நன்ருகத் தெரிந்தது. கோபமும் வெட்கத்தின் சாயலும் மேலோங்கி நிற்பதாகத் தோன்றியது. அவர் ஆத்திரம் கொண்டு எரிந்து விழவில்லே காரணம், பேசுகிறவர் பெரிய மனிதர், பணப் பவிஷாம். அதிக வயதும் உள்ளவர் என்பதாகத் தானிருக்க முடியும். ஞானசம்பந்தர் அவரைக் கவனியாமல் ரகுராமனின் குண ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 'என்ன மிஸ்டர் ரகு ராமன். உம்ம முகத்தைப் பார்த்தாலே நல்லாத் தெரியுது. நீர் வீண் சண்டை வளர்ப்பவர் ! அப்பாவி சகுராமன் வியப்புடன் கேட்டான் என்னேச் சண்டைக்காரன் என்ரு சொல் lங்க ? என்று. _ ஆட, கான் சொல்லலே ஐயா! உம்ம முகம் காட்டிக் கொடுக்குது. தெரியலே ? சண்டை வளர்க்கத் துடிப்பவன்,
பக்கம்:சகுந்தலா.pdf/146
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை