பக்கம்:சகுந்தலா.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சகுந்தலா இது புதிதாகத் தெரிய வேண்டிய விஷயமா என்ன ! வந்த புதிதிலேயே தெரிந்து விட்டதே. விட்டுக்குள்ளேயே அடைத்துக் கிடப்பதும், பக்கத்து விட்டுக்காரனேக் கண்டால் கூட ஒடிப்போப் பதுங்கிக் கொள்வதும், வெட்ட வெளியாய் கிடந்த தோட்டத்தை அடைத்துத் தட்டிக் கட்டச் செய் வதும்-ஐப்யப்பய்ய, கல்சரே கிடையாது! பண்பாடு இல் லசதவள். படித்து மனுே பக்குவம் பெருதவள். பிரைமரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கலாம்: இன்னும் அதிகமாகவே எண்ணியிருப்பான் அவன், ஆணுல் ஆதார மில்லாமலே சும்மா இவ்விதம் மதிப்பிடுவது தினது பண்பாட்டிற்கு விரோதமானது என்று கருதினுன் ரகு சமன். என்ன பிருந்தாலும், இவளேப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லேயே என்பது வருத்த சேகத் தானிருக்கிறது. அதுக்கு என்ன செய்யலாம்? ஏதா வது ஒரு வழி பண்ணியாகணும் ' என்று உறுதி கொண் 1.கன் ஆகி: , — 5 — قصير அன்று அந்த ஊரிலே தெப்பத் திருவிழா. சிவன் கோயில் தெப்பக்குளம் ஊருக்கு வடக்கே ஒதுங்கியிருந்தது, சாதாரண காலங்களில் கவனிப்பற்ற பாழிட்ம் போல் கிடந்த அந்த இடம் அன்று பூசணச் சோபையுடன் திகழ்ந்தது. குளத்தைச் சுற்றிலும் கும்பல். வெள்ளேயும் சிவப்புக் காவி நிறமும் பட்டை பட்டையாகப் பூசப்பட்டிருந்த சுவர்கள் மீதும் கூட்டம். குளத்தின் நடுவிலிருந்த மண்ட்பமும், நீரில் மிதந்த தெப்பமும் ஒளிமயமாய் தகதகத்தன. பளிச்சிடும் விளக்குகளுடன் போட்டியிடத் துணிந்தவர்கள் போல் பகட்டு ஆடைகளினுலும் ஒளி தெறிக்கும் ஆபரணங்களாலும் மினுக்கித் திரிந்த பெண்களுக்குக் குறைவில்லை. தெப்பம் பார்க்க வந்த கும்பலில்ே ரகுராமனும் கலந்து கொள்ள நேர்ந்தது. இதிலெல்லாம் அவனுக்கு ஈடுபாடு அதிகம் கிடையாது என்ருலும் ரசிக சிகாமணியான் அவனது நண்பன் ஒருவன் வற்புறுத்தி அவனேயும் அந்தப் பக்கமாக இழுத்து வந்திருந்தான். சகு எவ்வளவோ ஆட்சேபித்துப் பார்த்தான். பலிக்கவில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/38&oldid=814789" இலிருந்து மீள்விக்கப்பட்டது