பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார்

59



மான் வாழ்வு அவ்வளவு கசப்பான பாடத்தைக் கடுக்துயரொடு கலந்து இவ்வுலகுக்கு உணர்த்திவிட்டது. அணுவினும் நுண்ணியதாய்-அணுவைப் பிளந்தால் தோன்றும் ஆற்றலினும் பன்னூறு மடங்கு அதிகமான பேராற்றல் படைத்ததாய் விளங்கும் இயற்கையின் ஆற்றலை-பரந்த பேறாழின் வல்லமையை-என்னென்று கூறுவது! வாளெடுத்தவன் வாளால் மடிவான்,' என்ற சான்றோளின் வாக்கு அதிகமான் வாழ்வில் எவ் வளவு துயரக் காட்சிகளோடு கலந்து மெய்யாகிவிட்டது! 'மனிதனது ஒவ்வொரு செயலும் தன் எதிர்ச் செயலைக் கண்டே தீரும், எனும் இயற்கையின் சட்டத்தை எவரே உடைக்க வல்லார் தீயின் சுடர் வாலாக்கி எரிவதும், வெள்ளம் கீழ் நோக்கி விரைவதும் போலன்றோ தவிர்க்க முடியாத தன்மையதாய் அவ்வியற்கையின் ஆற்றல் விளங்குகிறது ? அதிகமான் மாண்டான். தகடூர் வீழ்ந்தது. வரலாறாகிவிட்ட இச்செய்திகளைப் பின்வரும் பதிற்றுப்பத்து அடிகள் விளங்குகின்றன:

பொய்யில் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானே யதிக மானோ(டு)
இருபெரு வேந்தரையும் உடனில் வென்று முரசுங் குடையுங் கலறுங் கொண்(டு)
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு[1]



வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறுழ்ழின் தகடூர் நூறி
பேஎ மன்ற பிறழ் நோக்கியவர்


  1. 1. பதிற்றுப்பத்து, 8-ஆம்,பத்து, பதிகம்