பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

15


முன்னறிந்து விலக்குவதிலும் அவர்கள் விரும்பும் இன்பத்திற்குரிய வழி துறைகளை நிலேபெற ஆக்குவதிலும் இடைவிடாது உழைத்து வருவானாயினன். தம் கீழ் வாழும் குடிமக்களின் கவலைகளையெல்லாம் தம் உள்ளத்தடக்கி ஊணுறக்கமின்றி உழைக்கும் பொறுப்பு, தமிழ் நாட்டு முடிவேந்தர்க்கு உரியதாயிருந்தது. நாட்டில் உரிய காலத்தில் மழை பெய்யாது போயினும், மக்கள் தவறு செய்தாலும், இவ்வுலக மக்கள் அரசனைப் பழித்துரைப்பார்கள். இப்பழிமொழி தம்மை அடையாதபடி குடிமக்கள் தரும் வரிப்பொருளைப் பெற்றுக்கொண்டு முறையற்ற செயல்கள் தம் நாட்டில் நிகழாதபடி நாட்டு மக்களைக் காப்பாற்றும் நல்ல அரச குடும்பத்திலே பிறப்பதனை மகிழ்ச்சிக்குரிய செயலாகத் தமிழ் வேந்தர் எண்ணினாரல்லர்.

“மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்!
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்!
குடிபுர வுண்டுங் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்.”

-சிலப். காட்சி. 100-104

எனச் சேரர் பெருமான் செங்குட்டுவன் கூறியதாக அமைந்த அனுபவமொழி, முடிவேந்தர்கள் ‘குடி தழிஇக் கோலோச்சும்’ முறையின் அருமையையும், அதனால் அரசர்க்குண்டாகும் கவலைகளையும் நன்கு விளக்குவதாம்.

நாட்டு மக்களுக்கு உரிமை வழங்காது அவர்களை அடிமைகளாக அடக்கியாளுங் கொடுங்கோலாட்சி முறை சங்ககாலத் தமிழ் மன்னர்க்குக் கனவிலுந் தெரியாததொன்றாம். தவறு கண்டால் அரசனையும் இடித்துரைத்துத் திருத்தும் உரிமையும்,தம்உள்ளக்கருத்தினைஅஞ்சாது