பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கும் அந்தக் காட்டு மாரியம்மன் கோயிலைக் காண ஆசையாக, இருக்கிறது” என்றான் வண்டிக்காரன்.

அதுவும் நல்லதுதான் என்று நால்வரும் புறப்பட்டனர். ஜின்கா கொஞ்ச தூரத்திற்குத் தங்கமணியின் தோளின்மீது அமர்ந்து சென்றது. பிறகு காட்டுத் தடம் வரவே மரங்களில் தாவித்தாவி அது முன்னால் போகலாயிற்று.

சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து காட்டு மாரியம்மன் கோயிலை அவர்கள் அடைத்தனர். “முதலில் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விடுங்கள்” என்றான் வண்டிக்காரன், அவனுக்குப் பசி எடுத்துவிட்டது போலும். மேலும் பாட்டி வீட்டுப் பலகாரங்கள் அவனுக்கு எப்பொழுதும் கிடைக்காதல்லவா?

பாட்டி கோதுமை ஹல்வா அவர்களுக்கென்று ஸ்பெஷலாகச் செய்து வைத்திருந்தாள், அத்துடன் முறுக்கு, வடை எல்லாம் இருந்தன.

ஜின்காவுக்கு ஹல்வா பிடிக்கவில்லை. ஆனால் வடையை வாயில் போட்டுக் குதப்பிக் குதப்பி நன்றாகச் சாப்பிட்டது.

வண்டிக்காரன் பாடுதான் கொண்டாட்டம். மற்ற மூவரும் அவசரம் அவசரமாக ஏதோ சாப்பிட்டார்கள். மீதி இருந்ததையெல்லாம் அவன் ஒரு கை பார்த்துவிட்டான்!

“பாவம், அவனாவது நன்றாகச் சாப்பிடட்டும்” என்று கண்ணகி அவனுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.

ஓடையில் தண்ணீர் அருந்திவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தார்கள்.

அங்கிருந்த பூசாரி இவர்களையெல்லாம் உற்சாகமாக வரவேற்றான். அம்மனுக்குப் பூஜை செய்துவிட்டுப் பிரசாதம் வழங்கினான். அதற்குமேல் அவன் அந்தக் காட்டு மாரியம்மன் கோயில் ரகசியத்தைப் பற்றியெல்லாம் எடுத்துரைத்தான்.

20