பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮》 அகுதை "தந்தை, கண்கவின் அழித்ததன் தப்பல் தெலுவா ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண்போக்கிய கடுந்தேர்த் திதியன் அழுந்தைக் கொடுங்குழை, அன்னி மீளுரிலியின் இயலும்." (அகம்: க.க க.க., அன்னி என்பாணுெகுவன், எவ்வி, எனும் வேளிர் தலைவனுடன் நட்புப்பூண்டு வாழ்ந்திருந்தான். அவ் வன் னிக்குத் திதியன் என்பானுடைய காவல் மரமாய புன் னேயை அழித்து வெற்றிபெற ஆசை உண்டாயிற்று : அஃதறிந்த எவ்வி, அன்னிகொண்ட ஆசை அடாதது: அவனுக்கே அழிவு தருவது என்றெல்லாம் கூறி த் தடு தான். அவன் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாத அன்னி, திதியன் புன்னேயை வெட்டி வீழ்த்தி அழித்தான் : அதனுல் சினங்கொண்ட திதியன், அன்னிபைக் குறுக்கை எலும் இடத்தே எதிர்த்துக் கடும்போரிட்டுக் கொன்ருன். கண்டன் கூறிய அறிவுரையைக் கேளது அழிவுற்ற அன்னி யைப் புலவர் பலரும் பழித்தனர். 苓 இனி, ஈண்டுக் கூறிய புன்னே, திதியனுக்குரிய தன்று; அது, அன்னியின் காவல் மரமேயாம்; அப் புன்னேயை, அழிக்க வன்தான் திதியன் அப்புன்னேயால் தான் கொண்ட ஆசையால், திதியைெடு போரிட்டு உயிர் துறந்: தான் அன்னி என்றும் சிலர் கூறுவர். சோணுட்டின ஆய பகைவன் ஒருவன், தன் காட்டின்மீது படையெடுத்துப் போந்து, தன் காவல் மரத்தை அழிக்கும்பொழுது, 'அவ்' வாறு அழிப்பானே எதிர்த்து அழித்தல்வேண்டும் . அதுவே ஆண்மைக்கு அழகு,” என்று கூறி ஊக்காது, "அழிப்பான் அழிக்கட்டும்: அவனுெடு போரிடப் போகற்க,” என்று கூறி அடக்குதல் அறமாகாது; அது கன்மொழியும் ஆகாது. அவ்வாறு கூறித் தடுப்பார் உளராயினும், அவர் உரை கேட்டு அடங்கிவிடாது, போரிட்டு உயிர் துறப்பானே உலகம் போற்றுமே யல்லால், கேளாது போய்க் கெட்டான்,' எனப் பழிக்காது. மாருக, பிறன் ஒருவனுக்குரிய காவல்மரத்தை வலியச் சென்று அழிப்பானுக்கு, "அவ்வாறு அழிக்க ஆசை