பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூக, ஒய்மான் வில்லியாதன் தென்னுர்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தை யும்,செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத் தென் பகுதியையும் தன்கண்கொண்ட நாடு, தமிழ்ச்சங்ககாலத்தே ஓய்மானடு என்ற பெயர் பெற்றிருந்தது; அதியமான் நெடுமானஞ்சி பிறந்த அதியர் குடியும், பேகன் பிறந்த ஆவியர் குடியும்போன்ற பழந்தமிழ்க் குடிகளுள் ஒவியர் எனும் குடியும் ஒன்ரும்; அதியர் குடிவந்த நெடுமானஞ்சி, அதியமான் என அழைக்கப் பெறுதலேபோல், ஒவியர் குடிவந்த அரசனும் ஒவியர்மான், ஒவியமான், ஒய்மான் என அழைக்கப்பெறுவன். அதைப்போன்றே ஒவியர் இருந் தாண்ட நாடும், ஒய்மான்நாடு எனவும் ஒய்மானடு எனவும் அழைக்கப்பெறும். - ஓய்மாடுை, ஐக்கில வளமும் அமையப்பெற்ற அழகிய காடு; அந் நாடு, மாவிலங்கை, எயிற்பட்டினம், கிடங்கில், வேலூர், ஆமூர்போன்ற பெரிய நகரங்க்ளேத் தன்னகத்தே கொண்டிருந்தது; இவற்றுள் காட்டின் தலைநகராம் சிறப் புடையது மாவிலங்கை. மாவிலங்கை, நீர்வளமும், கில வளமும் கிறையக்கொண்ட மருதநிலத்து மாநகரமாகும்; அவ்வூரை யடுத்து ஓடிவரும் ஆறு, தன்கண் புகுந்து நீராடும் மகளிர், பற்றி நீந்தும் புணேயாகப் பயன்படுமாறு சந்தனக் கட்டைகளேயும், அகிற்கட்டைகளேயும், சுரபுன்னே .யின் நறுமலர்களோடு அடித்துக் கொணர்ந்து ஒதுக்கும். அவ்வூர்வாழ் இளமகளிர், கோரைக்கிழங்கு தேடிப் பன்றி உழுத சேற்று கிலத்தில் ஆடப்புகுந்து, அந் நிலத்தைக் காலால் கிளறியவிடத்து, ஆண்டு ஆம்பற்கிழங்கும், யாமை முட்டையும் அகப்படக் கண்டு அகமகிழ்வர். விளேநிலத் துட் புகுந்து கெல்லரியும் வயல் உழவர், தம் கூரிய அரி வாள், அரிந்து அரிந்து வாய் மழுங்கியவிடத்து, மேலும் விரைந்து தொழிலாற்றுவான் வேண்டி, தம் அருகே கிடக்கும் யாமையின் வளைந்த முதுகோட்டைத் திட்டுக் கல்லாகக்கொண்டு திட்டுவர். அத்துணே மிகுவளம் உடை யது மாவிலங்கை. -