பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 ஒளவையார் ஒளவையாரால் பாடப் பெற்றனவர்கக் கருதப்பட்ட து எனக் கொள்வாரும் உண்டு, சங்க காலத்தைப்போன்றே, பிற்காலத்திலும் பெண் பாற்புலவர் பலர் வாழ்ந்திருத்தலும் கூடும் முதலில் தாய் என்ற பொருள் குறிக்கவந்த 'அவ்வை' என்ற சொல் பின்னர், முதிர்ந்த அறிவுடைய பெண்ணேக் குறிக்கவும் வழங்கியிருத்தலும் கூடும் இம் முறையால், பிற்காலப் பெண்பாற்புலவர் ஒவ்வொருவரும் ஒளவையார் எனவே அழைக்கப்பட்டிருத்தலும் கூடும் அத்தகைய பெண்பாற் புலவர்களுள் ஒருவரோ, பலரோ. மேற்கூறிய நூல்களைப் பாடியிருத்தலும் கூடும் எனக் கொள்வதாயினும் இழுக்கு ஒன்றும் இல்லே என்க. -