ஒளவையார் வரலாறு 13
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்க என வாள்போழ்ந்து அடக்கலும்," (புறம்: ௯௩)
உயிர்களுக்கு வாழ்நாள் வரையறுக்கப்பட்டுளது: அவ் வரையறை தவறாது, கூற்றுவன் உயிர்களைக் கொண்டு செல்வன்; அவ் வாழ்நாள் முடியும் நாளன்று வெண்கடுகுப் புகையெழுப்பித் தடுப்பினும் அவன் தவருது கொண்டு செல்வன் என்றும்,
"ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென உறுமுறை மரபில் புறம்நின்று உய்க்கும் கூற்றம்," (புறம்: ௯அ)
வைதீக முறைகளை விளங்க எடுத்துக் கூறியுள்ளார். உலகம் நிலையாமை உடைத்து,
"நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே ஆயினும் தம்மொடு செல்லா வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்.' (புறம்: ௩௯௭)
மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம், பார்ப்பார்க்குப் பூவும் புனலும் சொரிந்து பொன்தானம் புரிதல்வேண்டும்.
"ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து" (புறம்: ௩௪௭)
உயிர்க்கு ஊறு வந்துழி, நல்வினையே நற்றுணையாம். "வாழச்செய்த நல்வினையல்லது ஆகுங்காலைப் புணை பிறிதில்லை"; அந்தணர் செந்தீ வளர்ப்பர், "ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீ" என்ற கருத்துக்களையும் ஏற்றுக் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் கொண்டு நோக்கியவிடத்து, ஒளவையார், சிவனை வழிபடுகடவுளாகக்கொண்ட வைதீகச் சமயச் சார்புடையார் என்றே கொள்ளுதல் வேண்டும்.