34
ஒளவையார்
என்று பிறரும் கூறுவதைப்போல், எல்லாம் உங்கள் கையில் இருக்கும்; இடத்தால் ஒன்றும் இல்லை என்று ஒளவையார் கூறிய அறிவுரைகள், அனைவரும் ஏற்றுப் போற்ற வேண்டியதொன்றாம்.
(9) அவர் பாடிய அகத்துறைப் பாடல்கள்:
அகமே புறம், புறநிகழ்ச்சியெல்லாம், அகநிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே நிற்கும். ஆகவே, புறவாழ்வு திருந்தியதாக இருத்தல்வேண்டும் என விரும்புவோர், தம் அகவாழ்வைத் திருந்திய ஒன்றாக ஆக்கிக் கொள்ளுதல்வேண்டும். அகவாழ்வு, மனைவி மக்களோடு வாழும் இல்வாழ்க்கை, புறவாழ்வு, ஊராரோடும் உலகத்தாரோடும் உறவாடும் உலக வாழ்வு; வாழ்வில் அமைதி வேண்டின், இவ்விரு வாழ்விலும் அமைதி காணல் வேண்டும். யாண்டு பலவாகியும் நரையின்றியிருப்பது யாங்ஙனம் என்று கேட்டவர்க்கு, "என் மனைவியும், மக்களும் நிரம்பிய அறிவினர்"-"மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்'-எனத் தன் அகவாழ்வில் அமைதி காண்பதற்கான காரணத்தை முதற்கண்கூறி, "என் இளையரும் என் சொற்படி நடப்பர்; வேந்தனும் அல்லவை செய்யான்; என் ஊரில் சான்றோர் பலர் வாழ்கின்றனர்."
"யான்கண் டனை யர்என் இளையரும் வேந்தனும்
எனத் தன் புறவாழ்வில் அமைதி காண்பதற்கான காரண தைப் பின்னர்க் கூறினார் புலவர் ஒருவர். புறவாழ்வினும், அகவாழ்வே திருந்திய வாழ்விற்கு வழிகாட்டும் என்பதைக் கண்ட புலவர்கள், தமிழர் தம் அகவாழ்வு திருந்தவேண்டும் என்பதிலே மிக்க கவலை கொள்வாராயினர்; அதற்கு அவர்கள் கையாண்ட முறை தான் அகத்திணைப் பாடல்கள்; ஆடவரிற் சிறந்தான் ஒரு