கபிலரைப்பற்றிக் கூறும் கதைகள் 103 வரிசைப்படுத்தி, அவர்களோடு கலந்து நாற்பத்தொன்ப தாவது புலவராய்க் கலந்து வாழ்ந்துவந்தார். ஒருநாள், பொருள் இலக்கணத்தைப் புலவர்களுக்கு அறிவுறுத்த விரும்பிய இறைவன், 'அன்பின் ஐந்தினே’ என்று தொடங்கும் செய்யுளைக் கொண்ட களவியல் நூலை ஆக்கி அவர்களிடம் கொடுத்தார்; அந்நூலைப், புலவர்கள் எல்லாம் பாராட்டும் பொழுது நக்கீரர் மட்டும் அதைக் குறைகூறிப் பழித்தார். அதைக் கண்ட இறைவன், அவர் செருக்கை அழிக்க எண்ணங்கொண்டு, அரிய கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடலைப் பாடி இதற்குப் பொருள் கூறுங் கள்” என்று புலவர்களே நோக்கிக் கூறினர்; அந் நிலை யிலும், தம் செருக்குக் குலையாது கின்ற நக்கீரர், "இப் பாட்டு பிழையுடையது' என்று கூறினர் ; உடனே, இறைவன், ‘இவன் பொருமை உடையவன்; ஆகவே இவன் குற்றம் என்ருல், என் கவி குற்றமுடையதாகாது; நீங்கள் யாரேனும் கூறுங்கள் ; என் கவி குற்றமுடையதா ဉာx என்று கேட்டு கின்ருர்; புலவர்கள் வாய் திறந்திலர்; அங் கிலையில் உங்கள் முன் கிற்கும் புலவன் மதுரைச் சொக் கன்; உங்கள் பகை போக்க வந்துளான்; பகை நீங்கி அவனே வழிபடுங்கள்” என்ருெரு குரல் கேட்டது; உடனே புலவர் கள் அனைவரும் அவரை வணங்கி கின்றனர். அவரும் மறைநதாா. - இறைவன் செய்த களவியலுக்கு உரை எழுதினர் புலவர்கள் அனைவரும்; உரை எழுதி முடித்த அவர்கள், தங்கள் உரைகளின் தகுதி, தகுதியின்மைகளே அறிந்து கூறுமாறு, இறைவன் திருமுன் கின்று முறையிட்டனர்; இறைவன், புலவர் உருவில் வந்து கின்று, இவ்வூர், உப் பூரிகுடி கிழார்மகனுகிய ஊமை உருத்திரசன்மன்முன் உங் கள் உரைகளைக் கூறுங்கள்; அவன் கூறும் முடிவினே ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று கூறினர்; ஊமை எவ் வாறு உரைவளம் காண்டான் என்று உளங் கவன்றனர் புலவர்கள் ; உடனே இறைவன், உங்கள் உரைகளே. அவன்முன் படியுங்கள்; யார் உரைகேட்டுக் கண்ணிர்
பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/109
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை