பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 க பி ல ர் ஆரியரை வணக்கி வெற்றி கொண்டான் என்று கூறுகிறது பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தின் பதிகம். கண்ட காரணியத்து ஆரியர் கவர்ந்து சென்ற ஆடுகளை, அவரை வென்று மீட்டுக் கொணர்ந்தான் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் என்று ஆரும் பத்துப் பதிகம் கூறுகிறது. இவ்வாறு நிகழ்ந்த போர்களே கினைப்பூட்டும் புலவர்கள், போர் நிகழ்வுதை விரும்புவாால்லர்; எவ்வாருயினும் அதைத் தடுத்தல் வேண்டும் என்றே விரும்பியுள்ளனர்; நடக்க இருந்த போர்களே நடைபெற வொட்டாது தடுத்து நிறுத்திய புலவர்களும் உளர்; அத்தகைய புலவர்களுள் கபிலரும் ஒருவர். காரியின் முள்ளூர் மலையை ஆரியர் முற்றுகை யிட்டனர்; அவர்களை வேற்படை கொண்டு வென்று தரத்தின்ை காரி என்பதை அறிந்தவர் கபிலர்; அதனல், ஆரிய அரசர் சிலர், தமிழ்நாட்டிற்கு அண்மையில் எங்கோ வாழ்ந்திருக்க வேண்டும்; அவர்கள் தமிழ், தமிழர் இவர் களின் தகுதி, திறமைகளை அறியாத காரணத்தினலேயே தமிழரசர்கள்மீது போர் தொடுக்கின்றனர்; அவர்கள் தமிழர்களின் இயல்பினே அறிந்தாராயின் அவ்வாறு போரிடத் துணியார் என்று எண்ணினர்; அவர்களுக்குத் தமிழின் அருமை பெருமைகளை அறிவித்து நாட்டில் போர் நிகழ்வதைத் தடுத்தல் வேண்டும் என்று விரும் பினர்; உடனே, அவ்வாரியர் வாழ் இடத்தை அறிந்து சென்று அவர்கள் அரசன் பிரகத்தனைக் கண்டார்; அவ லுக்குத் தமிழின் அருமையை அறிவிக்க, தமிழ்நாட்டு மக்களின் இயல்பினே ஒருவாறு உணர்த்த வல்ல கருத் துக்கள் அடங்கிய குறிஞ்சிப்பாட்டு என்ற நீண்ட பாடலைப் பாடிக் காட்டினர்; அது கேட்டறிந்த அவ்வாரிய அரச உம், தமிழ் அறிவு பெற்றதோடு, தக்க பரிசுகள் அளித்துக் கபிலரின் புலமைத் திறத்தைப் புகழ்ந்து பாராட்டினன்.