பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 19 ஆகவே, அதை அவர்க்கு உணர்த்தி முற்றுகை விட்டு நீங்குமாறு செய்யக் கபிலர் எண்ணினர். பறம்பானே விட்டு வெளியே வந்து மூவேந்தரை அழைத்தார். வேந்தர் பெரு மக்களே! பறம்பு மலேக்கோட்டை நீங்கள் கினைப்பதுபோல் அவ்வளவு அரண் குறைந்ததன்று; அதைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதில் ஆகாது. பேரரசர்களாகிய நீங்கள் மூவரும் ஒன்றுகூடியே முற்றுகை மேற்கொண்டுள்ளிர் எனினும், பறம்பாணேப் பாழ்செயதல் இயலாது; உள்ளிருப்போர் என்றும் உங்களுக்குப் பணியார்; பணித்து போகுமாறு அவர்கள் வாழ்வில் குறை என்றும் ஏற்படாது; காரணம் உழுதொழில் இல்லாமலே பெறக்கூடிய உணவுப் பொருள்களுக்குக் குறைவில்லை; அங்கே செல்விளேயும் மூங்கிற் காடுகள் சிறைய உண்டு; அம் மூங்கில் அரிசியே அவர்களுக்கு ஆண்டு முழுதும் வரும், பறம்புமலை எங்கும் பலா மாங்கள் கிறைந்துள்ளன. அப் பலாமரங்கள் ஒவ் வொன்றும் பெரும் பெரும் பழங்கள் பலவுடையன; பூமியில் மறைந்து மண்டிக்கிடக்கும் வள்ளிக்கிழங்கு தோண் டிய இடங்களில் எல்லாம் தோன்றும்; அம் மலையில் ஆங் காங்கே தொங்கிக் கொண்டிருக்கும் தேன் கூடுகளி னின்றும் தேன் தானகவே வழியும். இதல்ை உள்ளிருப் போர்க்கு உணவுக் குறையே என்றும் உண்டாகாது. இட நெருக்கடி உண்டாகி ஒரு வேளை பணிவர் என்று எண்ணுதலும் கூடும்; ஆனல் அதற்கு வழியில்லை. பறம்பு வான்டோல் பரந்த இடம் உடையது; நீர்க் குறை உண்டா காதா? என்ற வேட்கை உங்களுக்கு எழுதல்கூடும். ஆல்ை, பறம்புமலே நீர்ச்சுனே பல கிறைந்தது. வானத்து மீன்களே எண்ணிக் காணல் இயலாதவாறுபோல், அம்மலையில் உள்ள உண்ணும் ர்ேச்சுனேகளே எண்ணிக் காணலும் இயலாது. ஆகவ்ே, எவ்வகையாலும் குறையுடையாால்லர் பறம்பினுள் உள்ளார். உங்கள் படை பெரியது என்பதை நான் உணர்வேன்; ஒவ்வொரு மாத்திலும் ஒரு யானையைக் கட்டி வைத்துள்ளீர்கள்; போர்க்களம் எங்கு நோக்கினும் தேர் வரிசைகளேயே காணுகின்றேன்; என்ருலும், இப் படை பறம்புக்கோட்டையைப் பாழ்செய்துவிடும்; பறம்பு