பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காவல பாவலர்கள் இப்பாட்டால், பூதப்பாண்டியன், மனேவியால் பேரன் புடையவன், நாட்டில் கல்லாட்சி நிலவவேண்டுமென்னும் நல்லெண்ணமுடையவன், சிறந்தர்ரை நண்பராகக்கொண்டு அவரைப் பிரியாது வாழும் நற்பண்புடையவன், தான் பிறந்தது பாண்டியர்குடி என்பதில் பெருமைகொள்பவன் என்பன புலனுதலறிக. பொதிய மலேயை உரிமையாக் கொண்டு வாழ்ந்த திதியனேத் தன் பாட்டில் வைத்துப் உாராட்டிய பூதப்பர்ண்டியன் செயல், "பொருநர் செல்சமம் சடங்த வில்கெழு தடக்கைப் பொதியிம் செல்வன் பொலந்தேர்த் திதியன். (அகம்:உடு) உண்மை வீரரை உயர்த்திப் புகழ அவன் உள்ளம் தயங்காது என்பதை உணரத்தும். கணவர் இறந்தாராக, அவரை இழந்து வாழக் கருதாது, உடனுயிர் துறக்கத் துணிந்து, சான்ருேர் பலர் கின்று தடுப்பவும் கில்லாது, அவர்க்குக், கற்புடை மனேவி யரின் கடமை யாது என்பதை, அழகிய பாக்கள் வழியாக எடுத்துக்கூறி உயிர் துறந்த சிறப்புடைய அம்மையாரைத், தம் அருமை மனேவியாகக் கொண்ட பெருமையுடையவர் கம் பூதப்பாண்டியன்.