பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காவல பாவலர்கள் பிரிவினைப்பொருத புலவர் பலர், அவனேத் தொடர்ந்து தம்தம் உயிரையும் துறந்தனர் என்று உலகோர்போற்ற வாழ்ந்த அரசன் கோப்பெருஞ்சோழன் ஒருவனே, Ljrf யின் பிரிவாற்ருது வடக்கிருந்து உயிர்துறந்தார் கபிலர் என்ற வரலாற்றினேத் தமிழுலகம் அறியும்; ஆல்ை பாரியின் பிரிவாற்ருது உயிர்துறந்தவர் கபிலர் ஒருவரே; கோப்பெருஞ்சோழன் பிரிவினேப் பொருது உயிர் துறந்த புலவர் பலராவர்; இந்தச் சிறப்பு, அக்கால அரசர் எவர்க் கும் கிடைக்காத பெருஞ் சிறப்பன்ருே? உறையூரைத் தலைநகராகக் கொண்டு உலகோர் போற்ற நாடாண்ட சோழ அரசர்களுள் கோப்பெருஞ்சோழனும் ஒருவன். கோப்பெருஞ்சோழனேப் பாடிய புலவர் பலர்; அவர்களுள் எவரும் அவன் அரசியல்வாழ்வு பற்றிய எதை யும் கூறினரல்லர் ஒரு புலவய்ை அவன் பாடிய பாக்கள் ஏழு அவற்றுள் எதுவும் அவன் அரசியல்பற்றிய குறிப்பு எதையும் கொண்டிலது. அவன் பாக்களும், அவனே ப் பாடிய புலவர் பாக்களும், நண்பனுய்ப் பழகற்குரிய கல்லோன், மானம் இழந்தபின் வாழிா மாண்புடையான் என்று அவன் பண்புடைமைகளேயே பாராட்டுகின்றன. கோப்பெருஞ்சோழன் நண்பர்கள்பால் கொண்டிருக் கும் பெருமதிப்பு அவன் பாடிய குறுக்தொகைப் பாடம் கண் தோன்றி விளங்குகிறது; தலைமகள் ஒருத்திபால் உள்ளத்தைப் பறிகொடுத்த கவலேயால் உடல் நலம் கெட்டா ைெரு தலைமகன், தன் உடல்நலக்கேடு குறித்துவினுய தன் நண்பனே, "என் நண்ப இ&ளஞர்கள் இன்புறுதற்குக் காரணமான நட்புக்குணமுடையோய்! அறிவுடையார்தம் அன்புடைத் தோழ' - i 'எலுவ சிரு.அர் ஏமுறு நண்ப! புலவர் தோழl" - (குறுக்:ச.உகி} என விளித்தான் எனப் பாடிப் புலப்படுத்தினமை காண்க. - ۶۰ . ;*