பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலங்கிள்ளி 73 குடிபுரவு இரக்கும் கூi லாண்மைச் சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே : மண்டமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவ குயின், ஆழ்நீர் அறுகய மருங்கில் சிறுகோல் வெண்கிடை என்றும் வாடுவறல் போல, நன்றும் நொய்தா லம்ம தானே ; மையற்று விசும்புற வோங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே" (புறம் : எடு) என்ற பாடற் பொருளும், நலங்கிள்ளி, இரப்போர்க்கு உயிரும் கொடுக்கும் உயர் கொடையாளன் ; இகழ்ந் தோரை எளிதில் அழிக்கவல்ல ஆற்றலன்; பரத்தையர் ஒழுக்கம் பேணுப் பண்புடையான் ; குடிபுரவு இரக்கும் குறையரசு அறியான், மண்டமர் கடக்கும் மதனுடை யான் என அவன் பண்பு பாராட்டுதல் காண்க. இப்பாக் களில், ஆற்றல் அறியாது எதிர்த்தானுக்குத் தூங்கும் புலியினே இடறிய குருடனேயும், அத்தகையான் கலங்கிள்ளி படையால் பாழாவதற்கு யானேயின் காலால் மிதியுண்ட மூங்கில்முளே அழிவதையும் உவமை கூறிய கலங்கிள்ளியின் புலமைச் சிறப்பினேயும் கண்டு பாராட்டுவோமர்க.