பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாங்குடி கிழார் 141: என்று கிலேயாமையினை வற்புறுத்தியுள்ளார். மதிரைக் காஞ்சியின் மாண்புகளைக் காட்டிக்கொண்டே சென்ருல் ஏடுவிரியும்; அவற்றை முழு நாலுட் கண்டுகொள்க. வாட்டாறு என்னும் ஊரில் வாழ்ந்த ஒரு தலைவனப் பாராட்டிய மாங்குடி கிழார், வாட்டாற்று எழினியாதன் ஊக்கமின்றி உறங்கிக் கிடப்பார்க்கு ஊக்கமூட்டும் உற்ற துணையாவன் ; அறிவு வழங்கும் நண்பரைப் பெருதார்க்கு நண்பனுகி அறிவு வழங்குவன்’ என்று பாடி, சில சொற். களால் அவன் புகழ் பலவும் தோன்றச் செய்துள்ளார் : ' உள் இலோர்க்கு வலியாகுவன் ; கேள் இலார்க்குக் கேளாகுவன் ’ (புறம்: டகசு) புறநானூற்றினும், பத்துப் பாட்டினும் புறப்பாட்டுக் கனேயே யன்றி, மாங்குடி கிழார் அகத்துறைப் பாடல்கள் சிலவற்றையும் பாடியுள்ளார்.