பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவூர் மூலங்கிழார் 59% கல்லாளை இல்லாளாகப் பெற்றவர்; உண்டும், கின்றும், ஊர்ந்தும் வாழும் பெருமிதவாழ்வு வாழும் விருப்பினர்; அவ்வாழ்வுவேண்டி, விரும்பாது அளிப்பார் அளிக்கும் பொருளையும் விரும்பும் உள்ளத்தவரல்லர்; அத்தகையார் அளிக்கும் பொருளே விரும்பாமையோடு, அவர்க்கு, அவர் தவற்றினே எடுத்துக்காட்டி இடித்துரைக்கும் இயல்பினர்; வேள்விபோற்றலும், தேவருலக வாழ்வு வாழ்த்தலும் ஆகிய வைதீக உணர்வுடையவர் என்பன அவர் வரலாற்றில் காணப்பெறும் பண்புகளாம் என்பது அறிய முடி கின்றது.