148 குட்டுவன் கண்ணணுர்
காதலியின் போன்பைப் பெறவேண்டிப் பலகாலும். பணிந்து கிற்றலைப் பெரிதும் உவப்பஞயின், அச்செயல், அவனுக்கு மேலும் பெருமையளிக்கும் பெருஞ்செயலாம் என்ற அரிய உண்மைகளே உரைத்து உலகத்தார்க்கு உயர் வழி காட்டியுள்ளார்.
உயரிய ஒழுக்கநெறி யுணர்க்கிய அப்பாட்டிலேயே, மழைபெய்யத் தழைத்து மலர்ந்து மணங்கமழும் சந்தனச் சோலைகளையும், நெடிய கேர் வழங்குவனவும், நிலவு போலும் வெண்மணல் பாத்தனவுமாய முன்னிடங்களே யுடைய மனேகளையும் கொண்ட தமிழகத்தின் கனிச்சிறப் பினேயும் காட்டியுள்ளார்.
' கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப் புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ஆயம் உவப்பத், தங்கை நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப் பத்தொடு பெயரும் பரிவிலாட்டி அருளினும், அருளாளாயினும், பெரிதழிந்து பின்னிலை முனியல்; மாநெஞ்சே! என்னது உம் அருந்துயர் அவலம் சீர்க்கும் மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.”
(நற் : கச0