பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ.அ. பெரும்பதுமனுர்

பெரும்பதுமனர், அகப்புறப் பாடல்களே அழகாகப் பாடவல்லராவர்; மீளிப் பெரும்பதுமஞர் என்பாரொருவர் உளர்; அவர் வேறு ; இவர் வேறு.

இாவலரும், புரவலரும் வாழவேண்டிய இவ்வுலகில் அவ்விருவர்க்கிடையே இருக்கவேண்டிய உறவுவிலை இக் தகைத்தாதல் வேண்டும் எனப் புலவர் கூறும் பொருளுரை பொன்னேபோல் போற்றற்குரித்தாம் ; நிறையப் பழுத்து கிற்கும் ஆலமரத்தை அடைந்து அகன் பழம் உண்டு மகிழும் பண்பினவாய பறவையினம், இம்மாத்துப் பழத்தை நேற்று உண்டோம் ; ஆகவே, இன்றும் அம் மரத்திற்கே செல்லுதல் நன்றன்று என்று எண்ணுமல், காள்தோறும் அம்மரத்தையே அடைந்து, அதன் பழத் தையே உண்டு மகிழும். அதைப்போலவே, வள்ளியோன் ஒருவனே அடைந்து அவன்தரும் பரிசிற்பொருள் பெற்று வாழும் பாணர், கூத்தர் முதலாம் இரவலர்களும், கம் கைப்பொருள் குறையுந்தொறும், அவன்பாலே சென்று பரிசில் வேண்டிசிற்பர் ; அவ்விரவலர் வாழ்வும் வறுமையும் தமக்கெனத் தனியே உடையால்லர் , தம்மை விரும்பி வரவேற்று வழங்கும் வள்ளியோர் வாழ்வே அவர்கள். வாழ்வாம்; அவ்வள்ளியோர் வறுமையே அவர்கள் வறு மையாம் எனப் புலவர் கூறும் பொருளாழம் பாராட்டற்

குரியதாம். :

' கடவுள் ஆலத்துக் கடவுச்சினேப் பல்பழம் நெருகல் உண்டனம் என்னது, பின்னும் செலவு ஆளுவே களிகொள் புள்ளினம் : அனேயர் வாழியோ! இாவலர்; அவரைப் புரவெதிர் கொள்ளும் பெருஞ்செய்யாடவர் உடைமை யாகும் அவர் உடைமை; . அவர் இன்மையாகும் அவர் இன்மையே.

. : . . . . . (புறம்: க.க.க)