பாணாற் பாடப்பட்டவர் 77
நிறைந்த மார்பினரைத் தேர்ந்தே போரிடும் பண்பினராவர்' எனப் பரணர் பாராட்டுவது காண்க :
' கெடுவள் ரூசி
நெடுவசி பாந்த வடுவாழ் மார்பின் அம்புசேர் உடம்பினர் நேர்ந்தோர் அல்லது தும்பை குடாது மலைந்த மாட்சி அன்னேர் பெரும!’ (பதிற்று : ச2.)
பகைவர் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தும் அரண் களுள் ஒன்ருகத், தங்கள் நாட்டைச் சூழ முள்வேலி யிடு வதைப் பழங்கால வேந்தர்கள் வழக்கமாகக் கொண்டிருக் தனர்; செங்குட்டுவன் பிறநாடுகள் மீது சென்று தாக்கும் படைவலியுடையான்; ஆகவே, தம்மீது வரும் பகைவர்களே கின்று தாங்கும் கிலேமை அவனுக்கில்லை; அவன், பகைவர் நாட்டு அரண்களைப் பாழ்செய்யும் பண்புடையான் ; தன் நாட்டு அழிவைத் தடுக்கும் அரண் அவனுக்குத் தேவை யில்லை ; அவளுேடு எதிர்கின்று போரிடும் பேராண்மை இன்றிப் பின்னிடுவர் வேந்தர் எல்லாம். ஆகவே, அவன் நாடு நோக்கி வரும் பகைவர் எவரும் இலர்; பகையில்லை ஆகவே, பகைவர்படையைத் தடுத்து கிறுத்தவேண்டிய தற்காப்பு அரண்முயற்சிகள் அவன் நாட்டார்க்கு இல்லை; அதனல், அவன் நாட்டுஎல்லையில், பகைவர்படைகளைத் தடுத்து கிறுத்தவல்ல முள்வேலிகள் இடப்பெறுவதில்லை; பரணர், செங்குட்டுவன்தன் இப்படைப் பெருமையினேப் பார்த்துப் பாராட்டியுள்ளார்: முள் இடுபு அறியா எனி.”
செங்குட்டுவன் போர்ப் பண்புகளைப் புகழ்ந்து போற் றிய பரணர், அவன் அருள் உள்ளத்தையும், புலவர்க்கும், இாலவலர்க்கும் பொன்னேயும், பொருளையும் வாரி வழங்கும் அவன் வள்ளன்மையினேயும் விளங்கப் பாடியுள்ளார்.
செங்குட்டுவன், செருப்பல கடந்த சிறப்பூரிடய தைலேயன்றி, கொடுத்து மகிழும் குணச் சிறப்பும் உடைய குவன்; மழை பெய்யாது பொய்த்துப் போகலில்ை, நாட் டில் மூங்கில்கள் கருகவும், வளங்குன்றப் பெருங்குன்றுகள்