பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாநகர்ப் புலவர்கள்-க

தோற்றுவாய்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண் டும்,” என இன்று விரும்புகின்ருேம் நாம், தெருவெல் லாம் தமிழ் முழக்கம் கேட்டது ம்ே பண்டைத் தமிழகத் தில். தமிழ்நாட்டுப் பேரூர்த் தெருக்களிலேயே யல்லா மல் சிற்றுார்களிலும், சேரிகளிலும் கேட்டது. அத் தமிழ் முழக்கம். பண்டைத் தமிழகத்தில் பிறந்தார் ஒவ்வொரு வரும் தம் தர்ய்மொழியாம் தமிழ்மொழியினே அறிக் திருந்தனர். "உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத் தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்று," என்ற அறி வினே, அக்கால மக்களும், அரசரும் ஒருங்கே பெற்றிருந் தனர். அதல்ை, தன் நாட்டு மக்கள் அனேவரும் கற்ரு ராய்த் திகழ்வதிற் காவலனும் க்ருத்துடையணுயின்ை ; கற்றல் தம் கடன்; அதற்கு அரசனே எதிர்நோக்கல் அறி யாமை என அறிந்து கற்றனர் மக்களும், கல்லாதவனேப் பொல்லாதவன் எனப் பழித்தனர் . இதல்ை, அக் கால மக்கள் எல்லோரும் கற்றனர்; கற்றனர். எனின், எழுதப் படிக்க ஆம் அத்துனே அளவே கற்றனர் அல்லர்; அருங் கவி பாடும் அளவு கற்றனர் . இதல்ை தமிழகத்தின் ஊர் தோறும் புலவர்கள் வாழக் காண்கிருேம். . . புலவர்கள் வரலாற்றினை விளங்க உணரும் வாய்ப் பில்லாமையால் அவர்கள் பிறந்த எல்லா ஊர்ப் பெயர்கள் யும் அறிந்து கொள்வதற்கில்லே ; தாம் பிறந்த ஊர்ப் பெயரைத் தம் இயற்பெயரோடு சேர்த்து வழங்கினர் சில