பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருஆர்க் கதப்பிள்ளை 3?

தலைவன் வரையாதுவந்து ஒழுகுவதால் வருந்தினுள் தலைமகள் என்பதறிந்த தோழி, தலம்கன்பாற் சென்று, தலைமகள் கிலேகூறி, இனியும். இக் களவொழுக்கமே விரும் புதல் நன்றன்று என உணர்த்தினுள் தலைவன் பண்புடை யவளுதலின், பிறர் தனக்குக் கூருமுன்பே, களவொழுக்கம். ஒழிந்து வரைந்துகொள்ளாமைக்கு வருக்தின்ை ; நாணி ன்ை வரைந்துகொள்ளத் துணிந்தான்் ; இதைக் தலை மகள்பால் கூறினுள் தோழி கூறுங்கால், யானும் வரைந்து கொள்ளும் காலம் வந்தமை யறிந்தே அவன்பால் வரைவினே வற்பு அறுத்தினேன்; அவனும், யான் வற்புறுத்து தற்கு முன்பே வரையத் துணிந்துவிட்டான். அவ்ன் வர்ைதல் உறுதி என அறியாது அவன்பால் வரைவினே வற்புறுத்தியது நம் அறிவில்லாமையினலேயேயாம் எனக் கூற விரும்புவாள், அதை வெளிப்படக் கூருது, காந்தளின் கொழுவிய பேரரும்பு தான்ுக மலர்க எனக் காத்திராது. வண்டுகள், அது மலருமாறு, அதனிடத்தே சென்று ஊதும் அவ் வண்டுகள் ஊதும் அக் காலத்திலேயே, அவ் அரும்பும் பிணிப்பு விட்டு மலரும்; இத்தகைய காந்தள் மலர்களை மிகப் பலவாகக் கொண்டது நம் தலைவன் மலே என்று கூறியும் வண்டு ஊத, வாய் மலரும் அம் மலரின் செய்கைக்குக், கடனறிந்த் மக்கள், தாம் அறிந்த சான்ருே ரைக் கண்டவுடனே, அவர்தம் குறை கூறுதற்கு முன்பே, அவரை விரைந்தேற்றுப் பேணும் செயலே உவமித்தும் குறிப்பால் உணரவைத்தாள். தோழியின் இத் திறமெல்

ல்ாம் நம் புலவரின் புலமைத் திறமாம் என்பத்றிந்தார்

அவர் புலமைக்குத் தலே வணங்குவாராக

'காந்தளம் கொழுமுகை காவல்.செல்லாது." வண்டுவாய் திறக்கும் பொழுதில் பண்டும் தாமறி செம்மைச் சான்ருேர்க் கண்ட , கடனறி மாக்கள் போல, இடன்விட்டு இதழ்களே அவிழ்த்த ஏகல் வெற்பன் கன்னர் நெஞ்சத்தன்; தோழி! கின்ங்கில யான் தனக்கு உரைத்தனெ ளுகத் . தான்் காணின்ன் இஃது.ஆக்ாவாறே." (குறுந்: உக்கி}