தாவரங்கள்
103
“மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவியிணர்
புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன்”-நற். 94 : 5-6
புன்னை மலரில் தாது நிறையத் தோன்றுவதால், மலரின் நிறமே பொன்னாகத் தோன்றும். தாது நறுமணமுடையது; நுண்ணியது; பொன்னிறமானது.
“புன்னை நறுவீ பொன்னிறம் கொளாஅ”
-அகநா. 260 : 9
“.... .... .... .... .... .... போதவிழ்
பொன்னிணர் மரீஇய புள்இமிழ்ப் பொங்கர்ப்
புன்னையஞ்சேரி”-குறுந். 320 : 5-7
“.... .... .... .... .... .... முடத்தாட்புன்னை
பொன்நேர் நுண்தாது நோக்கி”-அகநா. 180 : 13-14
“புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு”
-அகநா. 230 : 7
புன்னை மலர் மிக அழகானது; நறுமணமுள்ளது; வெண்ணிற அகவிதழ்களை உடையது; மலர்ந்த புன்னையில் பொன்னிறத் தாது மிளிரும். அகவிதழ்களுக்கடியில் தேன் சொரியும். இதன் அழகை நுகர்ந்த புலவர்கள் அங்ஙனமே கூறுவர். இதில் தேன் நுகர்ந்த வண்டுகள் ஒலித்து நிற்கும். உதிர்ந்த மகரந்தம் இளமணலை மணங்கொள்ளும்.
“கடிமலர்ப் புன்னை”
“ஆய்மலர்ப் புன்னை”
“திகழ்மலர்ப் புன்னை”-கலி. 135 : 6, 8, 12
“தேனிமிர் நறு மலர்ப்புன்னை”-அகநா. 170 : 2
“மல்குதிரை உழந்த ஓங்குசினைப் புன்னை
வண்டு இமிர் நுண்தாது பரிப்ப
மணங்கொள் இளமணல் எக்கர்”-அகநா. 250 : 2-4
“கருங்கோட்டுப் புன்னை மலர்த்தாது அருந்தி
இருங்களிப் பிரசம் ஊத”-நற். 311 : 9-10
“கடியிரும் புன்னை”-குறிஞ். 93”