பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

103

“மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவியிணர்
 புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன்”
-நற். 94 : 5-6

புன்னை மலரில் தாது நிறையத் தோன்றுவதால், மலரின் நிறமே பொன்னாகத் தோன்றும். தாது நறுமணமுடையது; நுண்ணியது; பொன்னிறமானது.

“புன்னை நறுவீ பொன்னிறம் கொளாஅ”
-அகநா. 260 : 9

“.... .... .... .... .... .... போதவிழ்
 பொன்னிணர் மரீஇய புள்இமிழ்ப் பொங்கர்ப்
 புன்னையஞ்சேரி”
-குறுந். 320 : 5-7

“.... .... .... .... .... .... முடத்தாட்புன்னை
 பொன்நேர் நுண்தாது நோக்கி”
-அகநா. 180 : 13-14

“புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு”
-அகநா. 230 : 7


புன்னை மலர் மிக அழகானது; நறுமணமுள்ளது; வெண்ணிற அகவிதழ்களை உடையது; மலர்ந்த புன்னையில் பொன்னிறத் தாது மிளிரும். அகவிதழ்களுக்கடியில் தேன் சொரியும். இதன் அழகை நுகர்ந்த புலவர்கள் அங்ஙனமே கூறுவர். இதில் தேன் நுகர்ந்த வண்டுகள் ஒலித்து நிற்கும். உதிர்ந்த மகரந்தம் இளமணலை மணங்கொள்ளும்.

“கடிமலர்ப் புன்னை”

“ஆய்மலர்ப் புன்னை”

“திகழ்மலர்ப் புன்னை”-கலி. 135 : 6, 8, 12

“தேனிமிர் நறு மலர்ப்புன்னை”-அகநா. 170 : 2

“மல்குதிரை உழந்த ஓங்குசினைப் புன்னை
 வண்டு இமிர் நுண்தாது பரிப்ப
 மணங்கொள் இளமணல் எக்கர்”
-அகநா. 250 : 2-4

“கருங்கோட்டுப் புன்னை மலர்த்தாது அருந்தி
 இருங்களிப் பிரசம் ஊத”
-நற். 311 : 9-10

“கடியிரும் புன்னை”-குறிஞ். 93”