பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

137

பயன் : இதன் கனி - ‘முள்’ - மருந்துக்குப் பயன்படுமென்பர்.

இத்தாவரக் குடும்பத்தில், ஏறக்குறைய 25 பேரினங்களும், 200 சிற்றினங்களும் உள்ளன. உலகில் வெம்மையான சற்று உப்பு மிகுந்துள்ள மாவட்டங்களில் இவை காணப்படுகின்றன. பெரிதும் சிறு புதர்ச் செடிகளாகவும், சிறு மரங்களாகவும் உள்ள இத்தாவரங்கள் தங்களுக்கென ஓர் அமைப்பைக் கொண்டுள்ளன என்பர். ஓராண்டுச் செடியும் அருகித் தோன்றும். இவற்றுள் ‘டிரிபுலஸ்’ என்ற பேரினத்தைச் சேர்ந்தது நெருஞ்சி.

‘நெருஞ்சி’, ஐரோப்பா முதல் மத்திய ஆசியா வரையிலும், தென் ஆப்பிரிக்காவின் வெப்பமான பகுதிகளிலும் வளர்கிறது. இந்தியாவில் டெக்கான் எனப்படும் தென்னாட்டில் வெப்ப மிக்கவிடங்களில் வளர்கிறது.